தமிழ்நாடு முழுவதும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு இன்று தொடங்குகின்றது. ஏப்ரல் எட்டாம் தேதி வரை 4107 மையங்களில் நடைபெறும் இந்த தேர்வை மாணவர்கள், தனித் தேர்வர்கள் மற்றும் சிறை கைதிகள் உட்பட 9.38 லட்சம் பேர் எழுதுகின்றனர். முறைகேடுகளை தடுக்க மாநிலம் முழுவதும் 4591 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 12 முதல் 22ஆம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணியை நடைபெற்று மே பத்தாம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகிறது.