இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி முதலமைச்சர் முக  ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்..

இலங்கை கடற்படையால் நேற்று கைது செய்யப்பட்ட 15 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் முக. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 15 தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.  மத்திய அரசு இலங்கை அதிகாரிகளுடன் தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தூதரக நடவடிக்கைகள் மூலமாகவே மீனவர்களின் உரிமைகள், வாழ்வாதாரங்களை பாதுகாக்க முடியும். இலங்கை கடற்படை நடவடிக்கை மீனவர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சாதகமான பதிலை எதிர்பார்ப்பதாகவும் கடித்தத்தில் குறிப்பிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.