தமிழகத்தின் தற்போது பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் ஏப்ரல் பத்தாம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட இருப்பதால் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதாவது நான்கு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கான தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 10 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த தேர்வுகள் ஏப்ரல் 4 மற்றும் 6 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.