
புழக்கத்தில் உள்ள 2000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மே 23 முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை மக்கள் அதனை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம். ஆனால் ஒருமுறைக்கு அதிகபட்சமாக 320,000 மட்டுமே மாற்ற முடியும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்நிலையில் டாஸ்மாக் கடைகளில் ரூ.2000 நோட்டுகளை ஊழியர்கள் வாங்க கூடாது.
அதையும் மீறி ரூ.2000 நோட்டுகளை வாங்கினால், அதற்கு டாஸ்மாக் விற்பனையாளர் மற்றும் மேற்பார்வையாளரே பொறுப்பு என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் டாஸ்மாக் கடைகளில் ரூபாய் 2000 நோட்டுகளை வாங்கலாம் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். டாஸ்மாக் கடைகளில் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்கக்கூடாது என எந்த சுற்று அறிக்கையும் அனுப்பவில்லை என்று வாடிக்கையாளரிடம் 2000 ரூபாய் நோட்டுகள் வாங்க கூடாது என்ற தகவல் நேற்று பரவிய நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்