
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கிய நிலையில் சமீபத்தில் அவர் கட்சியின் முதல் மாநாட்டினை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார். இந்த மாநாட்டில் தற்போது முதல்முறையாக இரு இலங்கைத் தமிழர்கள் தங்களுடைய பங்களிப்பை ஆட்சி உள்ளனர். தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு அரசியல் கட்சியின் மாநாட்டில் முதல்முறையாக ஈழத் தமிழர்கள் பங்களிப்பு இருந்தது இதுதான் முதல் முறை என்று கருதப்படுகிறது.
அதாவது தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெறும் போது தமிழ்த்தாய் வாழ்த்தினை பவதாஜினி நாகராஜன் பாடினார். இவர் தமிழீழ விடுதலை பாடல்களுக்கு இசையமைத்த கண்ணன் மஸ்ரர் அவர்களின் பேத்தியார். இதற்கு அடுத்தவர் ஈழத்து எழுத்தாளரும் பாடல் ஆசிரியருமான தன. ரஜீவன். இவர்தான் தமிழக வெற்றிக் கழகத்தின் பாடலை எழுதியவர். மேலும் முதல் முறையாக அரசியல் களத்தில் பயன்படுத்தப்பட்ட ஈழத்து கலைஞர்கள் இவர்களே.