பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஐம்பதாயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். மேலும் கடை வீதிகள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும், சுற்றுலா தளங்களிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் யாரும் குடித்துவிட்டு வாகனங்களை இயக்க வேண்டாம் எனவும், அத்தனையும் மீறி குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.