முதல்வர் மு.க ஸ்டாலின் பன்னாட்டு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் நாள் விழா அரசு விழாவாக நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் பொருளாதார வளர்ச்சியில் சமூக நீதியை நிலைநாட்டும் விதமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோருக்கு அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் 100 பயனாளிகளுக்கு 57.55 கோடி திட்ட மதிப்பீட்டின் தொழில் தொடங்க 18. 94 கோடி மானியத்திற்கான ஆணைகளை வழங்கி தொடங்கி வைத்தார்.

மேலும் இந்த திட்டத்தின் மூலமாக தொழிற்சாலைக்கான நிலம், கட்டிடம், இயந்திர தளவாடங்கள் மற்றும் சுழற்சிக்கான நடைமுறை, மூலதனம் ஆகியவற்றில் இருக்கும் 35 % முதலீட்டு மானியத்தோடு கடன் பெற வழிவகை செய்யப்படுகிறது. இதனை தொடர்ந்து பேசிய அவர் நடுத்தர தொழில் நிறுவனங்களில் தேவையை கருத்தில் கொண்டு செங்கல்பட்டு மாவட்டம் கொடூர், திருச்சி மாவட்டம் மணப்பாறை மற்றும் மதுரை மாவட்டம் சக்கிமங்கலம் ஆகிய இடங்களில் 262 ஏக்கர் பரப்பளவில் 153.22 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள மூன்று தொழிற்சாலைகளை தொடங்கி வைத்தார். மேலும் பல திட்டங்களையும் அதில் அறிமுகம் செய்த வைத்தார். நேற்று நடந்த இந்த விழாவில் 1723.5 கோடி மதிப்பில் முதலீடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக தமிழகத்தில் 30 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.