தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் மார்ச் மாதத்திற்குள் 30 சதவீத ரேஷன் கடைகளில் கருவிழி பதிவு திட்டம் நடைமுறைக்கு வரும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். ஒன்பது மாதத்திற்குள் அனைத்து ரேஷன் கடைகளிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் புதிய ரேஷன் கார்டுகள் அச்சடிக்கும் பணிகள் நடைபெற்ற வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் வரும் பொங்கலுக்குள் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார்.