நாம் தமிழர் கட்சியின் தக்கலை ஒன்றிய தலைவர் சேவியர் குமார் படுகொலையை கண்டித்து மாநிலம் முழுவதும் போராட்டம் வெடிக்கும் என்று சீமான் எச்சரித்துள்ளார். திமுகவினர் செய்த நிர்வாக சீர்கேடுகளை தொடர்ச்சியாக தட்டி கேட்டதால் சேவியர் குமார் கொலை செய்யப்பட்டுள்ளார். இதற்கு காரணமான திமுக ஒன்றிய செயலாளர் உட்பட அனைவர் மீதும் நடவடிக்கையை தமிழக அரசு உடனே எடுக்க வேண்டும் என்ற சீமான் வலியுறுத்தியுள்ளார்.