தமிழகத்தில் மழைப்பொழிவு காரணமாக மாநிலம் முழுவதும் காச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஎஸ் வகை கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி நோய்களை பரப்பி வருகின்றன. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பொது இடங்களில் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிர படுத்த சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. அதோடு பயன்பாடு இருக்கும் டயர் மற்றும் டியூப்களை அகற்றுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.