தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் ஏப்ரல் மாதம் முதல் முழுமையாக கணினி மயமாக்கப்பட இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. அதாவது டாஸ்மாக் கடைகளில் மது பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலிப்பதாக புகார்கள் எழுந்ததால் மது பாட்டலுக்கு பில் கொடுக்கும் நடைமுறை மற்றும் qr கோடு மூலம் பணம் செலுத்தும் நடைமுறை போன்றவைகளை அறிமுகப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏற்கனவே இந்த பில்லிங் முறை இராமநாதபுரம் மற்றும் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் சோதனைகள் இருக்கும் நிலையில் ஓரிரு வாரங்களில் சென்னையில் அமல்படுத்தப்பட உள்ளது.

இதைத்தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தப்படும். ஏற்கனவே காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளில் உள்ள ஊழியர்களுக்கும் பில் போட்டு ரசீது வழங்குவது தொடர்பான பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து ஏப்ரல் மாதம் முதல் டாஸ்மாக் கடைகள் கணினிமயமாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனால் மதுபான கடைகளில் முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்க முடியும் என்று நம்பப்படுகிறது.