சேலம்: உடையாப்பட்டி துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால், நாமமலை அடிவாரம், குட்டிக்கரடு, நெசவாளர் காலனி, ஸ்ரீநகரம், சாஸ்திரி நகர், ஆர்.டி.ஓ. அலுவலகம் ஆகிய பகுதிகளில் இன்று (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல், அஸ்தம்பட்டி துணை மின்நிலையத்திற்குட்பட்ட கோரி மேடு மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடப்பதால், இன்று காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை கோரிமேடு, பெரிய கொல்லபட்டி, சின்னகொல்லப்பட்டி, மாருதி நகர், அன்பு நகர், ஏற்காடு மெயின் ரோடு, சட்டக்கல்லூரி, இந்திரா கார்டன், மாடர்ன் தியேட்டர் புதூரான் காடு, வர்மா கார்டன், காளியம் மன் நகர், முல்லை கார்டன், காவேரி நகர், அசோக் நகர், எம்.எல். நகர், ராமநாதபுரம், ஜட்ஜ் ரோடு, மோட்டான் குறிச்சி, கன்னங்குறிச்சி ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

திருவண்ணாமலை: செங்கம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளான செங்கம், போளூா் சாலை, மில்லத்நகா், தளவாநாயக்கன்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை: மாநகர் பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 4 வரை மின்தடை செய்யப்படும். ஜி.டி. பீடர், ரயில் நகர், லாயிட்ஸ் அவென்யூ, திருவாளர் நகர், ஜம் ஜம் நகர், உமர் நகர், பாரதி நகர், திருமறை நகர், வசந்தம் நகர் மற்றும் எம்.எஸ்.நகர் பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் 33 கேவி, காரணிஹாய், திருவையாறு, விளார், இ.பி. காலனி பகுதிகளில் இன்று (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படும். திருநாகேஸ்வரம், திருநீலக்குடி, பேராவூரணி, பெருமகளூர், திருச்சிற்றம்பலம் பகுதிகளிலும் மின்தடை ஏற்படும்.

தேனி: கம்பம், கூடலூர், நாகராட்சி, பெரியார், சுருளிப்பட்டி, துர்க்கையம்மன்கோவில், உத்தமபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் இன்று (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படும். அதே போல், ஆண்டிபட்டி, பாலக்கோம்பை, ஏத்தாக்கோவில் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் காலை 9 மணி முதல் பணிகள் முடியும் வரை மின்தடை ஏற்படும்.

சிவகங்கை: சிவகங்கை ஆட்சியர் அலுவலகம், மருத்துவக் கல்லூரி, காஞ்சிரங்கல் மற்றும் தேவகோட்டை, ராம்நகர், வேப்பங்குளம், கண்ணங்குடி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் பணிகள் முடியும் வரை மின்தடை ஏற்படும்.

ராமநாதபுரம்: ஆர்‌.எஸ்.மடை துணைமின் நிலைய டவுன் – 1 பீடரில் பள்ளி தேர்வுகளை முன்னிட்டு அவசரகால பராமரிப்பு நடைபெற உள்ளதால் நாளை (ஞாயிறுக்கிழமை) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை காலை 10 மணியில் இருந்து மாலை 5 மணிவரை கேணிக்கரை, சக்கரக்கோட்டை ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

விருதுநகர்: அருப்புக்கோட்டை நகர் மற்றும் ஒன்றிய பகுதிகளில் இன்று (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும் என உத்தேசிக்கப்பட்டிருந்தது. தற்போது தேர்வு சமயம் என்பதால் மாணவர்களின் நலன் கருதி இன்று மின்தடை கிடையாது எனவும், தேர்வுகள் முடியும் வரை இரண்டு மாதத்திற்கு மின்தடை கிடையாது எனவும் அருப்புக்கோட்டை மின்வாரிய செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.