தமிழகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3ஆம் தேதி சத்துணவு மையங்களில் குழந்தைகளுக்கு சர்க்கரை பொங்கல் வழங்க அரசாணை வெளியிடப்பட்டது. தமிழகத்தில் சத்துணவு திட்டத்தில் பயனடைந்து வரும் குழந்தைகளுக்கு காமராஜர், அண்ணா, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் பிறந்தநாள் அன்று சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து இனிவரும் காலங்களில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் அன்று சர்க்கரை பொங்கல் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது குழந்தைகள் மையங்களில் சத்துணவு திட்டத்தில் பயனடைந்து வரும் இரண்டு முதல் ஆறு வயது குழந்தைகளுக்கு கருணாநிதி பிறந்தநாள் இன்று  சர்க்கரை பொங்கல் வழங்க பட உள்ளது.