தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மார்ச் 1 முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. அரசு பள்ளிகளில் தரமான கல்வி வழங்கப்படுவதை பொதுமக்கள் அனைவரும் அறியும் வகையில் பேனர்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலம் தெரியப்படுத்தவும் மாணவர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்கள் மற்றும் காலை சிற்றுண்டி வழங்குவது குறித்து எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.