திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர். மாசுபிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது சரியான நேரத்தில் பணியில் இல்லாத மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு உத்தரவு பிறப்பித்தார்.
மேலும் தமிழகம் முழுவதும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நாய்க்கடி, பாம்பு கடி மருந்துகள் இருப்பு குறித்து பொதுமக்கள் அறிந்து அவர்கள் தேவைக்கேற்ப பயன்படுத்தும் விதமாக அதற்குரிய மருந்து இருப்பு தொடர்பான அறிவிப்பு பலகைகளை வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.