தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவல் வேகமெடுத்துள்ளது.இந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில், அக்.1ம் தேதி காலை 9 – மாலை 4 மணி வரை தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு முகாமை காய்ச்சல் உள்ளிட்ட பிரச்னை இருப்பவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன்வலியுறுத்தியுள்ளார். எனவே பொதுமக்கள் மறக்காமல் இந்த முகமை பயன் படுத்தி கொள்ளுங்கள்.