போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் தமிழக அரசை கண்டித்து மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் அறிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், திமுக அரசை கண்டித்து மார்ச் 12ஆம் தேதி தமிழகம்  முழுவதும் காலை 10 மணி அளவில் மனித சங்கதி போராட்டம் நடத்தப்படும். அத்துடன் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆளுநரை சந்தித்து மனு அளிக்க உள்ளோம் என்றும் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.