தமிழகத்தில் இன்று பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு  இடங்களில் லேசானது முதல் மிதமான மழை செய்ய வாய்ப்பு உள்ளது. அதன்பிறகு 28ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை நீடிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 8 மாவட்டங்களில் மழை பெய்ய இருப்பதாக தற்போது வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, அரியலூர், பெரம்பலூர், கரூர், திருச்சி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.