தமிழகத்தில் கூட்டுறவு சங்கத் தேர்தலை 6 மாதங்களுக்கு பிறகு நடத்த ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது. அந்த 6 மாதகாலம் உறுப்பினர் பட்டியலை திருத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஈரோட்டை சேர்ந்த சண்முகம் என்பவர் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 18ஆயிரத்திற்கு மேற்பட்ட சங்கங்கள் உள்ளன. அதன் உறுப்பினர் பட்டியலில் குளறுபடிகள் இருப்பதால் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.