
தமிழ்நாட்டில் இன்று பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் தற்போது இரவு 7 மணி வரையில் 23 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அரியலூர், சேலம், தூத்துக்குடி, மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாமக்கல், சேலம், தர்மபுரி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், கிருஷ்ணகிரி, விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களிலும் கன மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.