தமிழ்நாடு மின்சார வாரியம் தமிழ்நாடு முழுவதும் சூரிய சக்தி பூங்கா திட்டத்தை தனியார் பங்களிப்போடு அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தி அதன் மூலமாக 2000 மெகாவாட் திறனையும் மின் உற்பத்தி செய்ய முடிவெடுத்துள்ளது. இதற்கான அறிவிப்பை கடந்த 2021 ஆம் வருடங்களில் வெளியிட்டது. இவ்வாறு மின் உற்பத்தி செய்வதற்கு ஒரு மெகாவாட்டிற்கு ஐந்து ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. எனவே துணை மின் நிலையங்களுக்கு அருகில் நிலம் வழங்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் மின்வாரியம் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி முதல் கட்டமாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவாரூர், கரூர், சேலம், நாகை உள்ளிட்ட பல மாவட்டங்களில் நிலங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில் தலா 50 முதல் 100 மெகா வாட் என்று இரண்டாயிரம் மெகாவாட் திறனில் மின் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக பூங்காவை திருவாரூரில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.