தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், காஞ்சி, விழுப்புரம், தஞ்சை, மயிலாடுதுறை, நாகை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும். ஏற்கனவே மழை எதிரொலியாக திருவண்ணாமலை, விழுப்புரம், மயிலாடுதுறை மற்றும் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் மேலும் பல மாவட்டங்களில் விடுமுறை குறித்து அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.