தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு அரசு சார்பில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. அதாவது படித்து முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எந்தவித வேலையும் கிடைக்காமல் 5 வருடங்களுக்கு மேலாக காத்திருக்கும் இளைஞர்கள் அனைவருக்கும் மாதம் தோறும் உதவித்தொகை அரசு சார்பில் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 300 ரூபாய், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு 200 ரூபாய், மேல்நிலைக் கல்வியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 400 மற்றும் பட்டதாரிகளுக்கு 600 ரூபாய் என மூன்று வருடங்களுக்கு வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தில் தற்போது உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் எனவும் இதனை பெற மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து ஐந்து ஆண்டு காலம் முடிவடைந்து இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க ஆருத்ராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதிற்கு மிகவும் மற்றவர்கள் 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். இந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டவர்கள் நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிலதி வழிகாட்டு மையத்திற்கு அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் செல்ல வேண்டும் அல்லது www.tnvelaivaaippu.gov.in  என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.