மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட சேதம் காரணமாக அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் அரையாண்டு தேர்வுக்கான தேதி . இதனை தொடர்ந்ஒத்தி வைக்கப்பட்டது. தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டத்தில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த நான்கு மாவட்டங்களிலும் உள்ள பள்ளிக்கு கல்லூரிகளுக்கு ஒரு வாரமாக விடுமுறை வழங்கப்பட்டது. மேலும் இந்த மாணவர்களுக்கு மட்டும் அரையாண்டு தேர்வு தள்ளி வைக்கப்படும் எனவும் மற்ற மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு வழக்கம்போல நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது.

அரையாண்டு தேர்வு முடிவடைந்து விடுமுறை விடப்பட்டது. இந்த நிலையில் மழை வெள்ளத்தால் அரையாண்டு தேர்வு எழுதாத நெல்லை மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுக்கான தேதி வெளியிடப்பட்டுள்ளது. 6 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 4ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரையிலும், 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 4 ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரையிலும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.