தமிழகத்தில் மது விற்பனைக்கூடங்களான டாஸ்மாக் கடைகளில் கண்ணாடி பாட்டில்களை நிறுத்திவிட்டு டெட்ரா பேக்குகளை அறிமுகம் செய்ய உள்ளதாகவும் அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அமைச்சர் முத்துசாமி அறிவித்துள்ளார். இதன் மூலம் பாட்டில்கள் ஆங்காங்கே உடைந்து கிடப்பது தவிர்க்கப்படும் எனவும் மேலும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாதவை என்பதால் டெட்ரா பேக்குகள் குறித்து தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.