தமிழகத்தில் பெரும்பாலான நலத்திட்டங்கள் ரேஷன் கடைகள் மூலமாக மக்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலவச மளிகை தொகுப்பு மற்றும் பொருட்களுடன் ஆயிரம் ரூபாய் பரிசு தொகையும் வழங்கப்படுகிறது. இதனால் ரேஷன் கடை ஊழியர்களுக்கு பணி சுமை அதிகமாக உள்ளதால் இதனை கருதி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இது தொடர்பாக ஆராய்ந்து அரசு ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்கு முடிவு செய்துள்ள நிலையில் ஒரு கார்டுக்கு 50 பைசா வீதம் 1.07 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்பாளர் ரேஷன் கடை ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.