தமிழகத்தில் தகுதியுள்ள குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருவது பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இருந்தாலும் பல பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்கவில்லை. இது வரும் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என கூறப்பட்ட நிலையில் 2024 ஆம் ஆண்டு பொங்கலுக்கு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பச்சரிசி, சர்க்கரை மற்றும் முழு கரும்பு ஆகியவற்றுடன் ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்க அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.