தமிழ்நாட்டில் கன மழை எதிரொலியாக இன்று  மொத்தம் 22 மாவட்டங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, விழுப்புரம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், ராணிப்பேட்டை, வேலூர், சேலம், புதுக்கோட்டை, காஞ்சிபுரம், திருவாரூர், திண்டுக்கல், ராமநாதபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருப்பத்தூர், கரூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இதில் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் திருநெல்வேலியில் தொடக்கப் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தற்போது தஞ்சாவூர் மாவட்டத்திலும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் இன்று 19 மாவட்டங்களில் அரையாண்டு தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்