
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியில் ரமேஷ் (56) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் நிலையில் பள்ளி முடிவடைந்த பிறகு மாலை நேரங்களில் மாணவர்களுக்கு டியூஷன் எடுப்பதை வழக்கமாக வைத்திருந்தார். இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு 11ஆம் வகுப்பு மாணவி டியூஷன் படிக்கும் நிலையில் அந்த மாணவிக்கு ரமேஷ் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி தன் பெற்றோரிடம் கூறிய நிலையில் அவர்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ஆசிரியர் ரமேஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும் பள்ளியில் படிக்கும் மாணவிக்கு ஆசிரியரே பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது.