தமிழகத்தில் மின்சார வாரியம் சார்பாக மின் இணைப்பு தொடர்பான புகார்களை தெரிவிப்பதற்கு மின்னகம் என்ற புதிய சேவையை முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். இந்த சேவை மையத்தில் பொதுமக்கள் மின் கட்டணம் பற்றிய சந்தேகங்கள், புதிய மின் இணைப்பு, பழுதடைந்த மின் பெட்டிகள், மின்தடை மற்றும் சேதம் அடைந்த மின் கம்பிகள் என பல புகார்களை தெரிவிக்கலாம் என அரசு தெரிவித்துள்ளது.

இங்கு வரும் புகார்களை எளிதில் தீர்க்கும் விதமாக புகார்களுக்கு தனித்தனி அடையாள எண்கள் வழங்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தீவிரமாக செய்து வருகிறது. இந்த எண் ஆதார் எப்படி அனைத்து பயன்பாட்டுக்கு உதவியாக உள்ளதோ அதனைப் போலவே பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வழியில் ஏதாவது ஒரு மின்கம்பத்தில் பிரச்சனை இருந்தால் அதில் உள்ள பிரத்தியேக எண்ணை குறித்துக் கொண்டு மின்னகத்திற்கு புகார் தெரிவிக்கலாம் என அரசு தெரிவித்துள்ளது.