தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அனைத்து மாவட்டங்களிலும் தோழி விடுதி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்களில் தங்கி பணியாற்றும் பெண்களுக்காக குறைந்த கட்டணத்தில் அதிநவீன வசதிகளுடன் தோழி என்ற பெயரில் அரசு சார்பில் விடுதி செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் பழைய மகளிர் விடுதிகள் தோழி விடுதி என்ற நிறுவனம் மூலம் நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளன. மேலும் சென்னையில் உள்ள தாம்பரம், பரங்கிமலை, திருவண்ணாமலை, ஓசூர், கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் தோழி விடுதி கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல்வரின் உத்தரவின்படி தமிழகத்தில் மாவட்டத்திற்கு ஒரு தோழி விடுதி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.