
தமிழகத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் சுமார் 1.14 கோடி பெண்கள் பயன்பெறும் நிலையில் மாதந்தோறும் 15ஆம் தேதி பெண்களின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் பணம் வரவு வைக்கப்படுகிறது.
இந்நிலையில் மகளிர் உரிமைதத்தொகைக்கு விடுபட்ட பெண்கள் மற்றும் மீண்டும் விண்ணப்பிக்க விரும்பும் பெண்களுக்காக தமிழக அரசு அரிய வாய்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி ஜூன் 4-ஆம் தேதி தமிழகம் முழுவதும் 9000 இடங்களில் மகளிர் உரிமை தொகையை விண்ணப்பிப்பதற்காக சிறப்பு முகாம்கள் நடைபெற இருக்கிறது.
மேலும் மகளிர் உரிமை தொகை பெற விரும்பும் பெண்கள் இந்த முகாம்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.