மே 17 இயக்கத்தின் புதிய கொடியை வைகோ, திருமாவளவன் மற்றும் வேல்முருகன் ஆகியோர் அறிமுகப்படுத்தினர். அந்த கொடியின் மேல் பட்டையில் சிவப்பு வண்ணமும், நடுவில் மஞ்சள், ப்ளூ மற்றும் கருப்பு வண்ண ஸ்டாருக்கு நடுவில் புலியும் இடம்பெற்றுள்ளது. இதுவரை இயக்கமாக இருந்த மே 17 இனி அரசியல் கட்சியாக உருவெடுக்கிறதா? குறிப்பாக சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு எதிரான அரசியல் களத்தில் திருமுருகன் காந்தி இறங்குவாரா என கேள்வி எழுந்துள்ளது.