
கேரளாவில் தற்போது எலி காய்ச்சல் மற்றும் டெங்கு பாதிப்பு தீவிரமாக பரவி வருவதால் தமிழக எல்லையோர மாவட்டங்களில் மருத்துவ கண்காணிப்பை பொது சுகாதாரத்துறை விரிவு படுத்தியது. அதே சமயம் தேவையான இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்துவதற்கும் உத்தரவிட்டது. இந்நிலையில் பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்களுக்கான சிறப்பு அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரி வளாகங்களில் கொசு உற்பத்தி ஆகாமல் தடுப்பதற்கான ஆய்வை முன்னெடுத்து அதனை ஒழிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
பள்ளி வளாகம் முழுவதும் கொசு புகை மருந்து அடித்தல் வேண்டும். மேல்நிலை மற்றும் கீழ்நிலை தொட்டிகளை சுத்தமாகவும் குளோரின் கலந்தும் பராமரிக்க வேண்டும். மாணவர்களுக்கு காய்ச்சல் பாதிப்புகள் கண்டறியப்பட்டால் உடனடியாக துணை சுகாதார இயக்குனர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதன் மூலம் சிறப்பு முகாம்கள் உள்ளிட்ட கடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.