2023 – 2024 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட் இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது . திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு  கடந்த ஆண்டு ஆகஸ்ட் 13-ஆம் தேதி  தமிழக அரசின் திருத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் 23 – 24 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட் இன்று காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

காகிதம் இல்லா இ- பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் இன்று பிற்பகலில் அலுவல் ஆய்வு குழு கூடி பேரவை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது ? என்பது குறித்து முடிவு செய்யும். கடந்த ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையின் படி முதல் முறையாக தமிழகத்தின் வேளாண் துறைக்காக தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதே போல இந்த ஆண்டும் வேளாண்துறைக்கான தனி பட்ஜெட் வரும்  19ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது.

பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்நிலம் வாங்குவோரின் சுமையை குறைப்பதற்காக பதிவு கட்டணத்தை 4 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாக குறைக்க அரசு முடிவு செய்துள்ளது என்றார். நடப்பு நிதி ஆண்டில் 574 கோவில்களில் குடமுழுக்கு விழா நடத்தப்பட்டுள்ளது. இதேபோன்று வரும் நிதி ஆண்டில் 400 கோவில்களின் பணிகள் முடிக்கப்பட்டு குடமுழுக்கு விழா நடத்தப்படும். இதனையடுத்து பழனி, சமயபுரம், திருத்தணி, ஆகிய கோவில்களில் பெருந்திடப் பணிகள் 485 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். அனைத்து துறைகளிலும் பெண் தொழில் முனைவோர்களை உருவாக்குவதற்கு தனி ஸ்டாட் ஆப் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறினார்.