தமிழகத்தில் அரையாண்டு விடுமுறைக்கு பிறகு நாளை ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். தற்போது தமிழகத்தின் புதிய வகை கொரோனா பரவல் பேகம் எடுத்துள்ள நிலையில் கொரோனா அறிகுறி உடன் இருக்கும் மாணவர்கள் பள்ளிக்கு வருவதை தடுப்பது குறித்தும் பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்படுவதாக தெரிகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என கூறப்படுகிறது.