தமிழகத்தில் வரும் நவம்பர் 25ஆம் தேதி கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாடப்பட உள்ளது. கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலையில் மகரஜோதி தீபம் ஏற்றப்படும். அதற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவார்கள். இந்நிலையில் இது குறித்து வெளியான அறிக்கையில், கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை பகுதியில் நவம்பர் 25 முதல் நவம்பர் 27 வரை மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்  அறிவித்துள்ளார்.