தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கல்லூரிகளுக்கான தனித்தனியான விண்ணப்பங்களை பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும். ஆனால் இதற்கு பதில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகளில் பயில ஒரே விண்ணப்ப முறையை சிங்கிள் விண்டோ சிஸ்டத்தின் கீழ் வரும் கல்வி ஆண்டு முதல் விண்ணப்பங்கள் பெற உள்ளதாக கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவி பெறும் பாடப்பிரிவுக்கான மாணவர் சேர்க்கை ஒற்றைச் சாளர முறையில் அமைக்க தேவையான ஆய்வு மேற்கொண்டு அது குறித்த விரிவான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென குறிப்பிட்ட கல்லூரி முதல்வர்களை கொண்டு குழு அமைத்து கல்லூரி கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். இந்த ஆய்வுக் குழுவின் முடிவுகள் அடிப்படையில் வரும் கல்வியாண்டு முதல் விண்ணப்ப செயல்முறை செயல்படும் என்று புது அறிவிப்பு வெளியாகி உள்ளது.