தமிழகத்தில் பொதுவாகவே முக்கிய பண்டிகை நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு வருகின்ற ஏப்ரல் நான்காம் தேதி டாஸ்மாக் கடைகள் மற்றும் பாரதம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விதியை மீறி மதுபானம் விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

சென்னை,நாமக்கல் மற்றும் திருவள்ளூர் என தொடர்ச்சியாக டாஸ்மாக் விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் மூடப்படுவது வழக்கம். தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இது குறித்து அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாக உள்ளது.