தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை நவம்பர் மாத இரண்டாவது வாரத்தில் தீவிரம் அடையும் என்றும் வழக்கத்தை விட அதிகமான மழைப்பொழிவு இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் பிறகு நவம்பர் 5-ம் தேதி வங்கக்கடலில் ஒரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ள நிலையில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இந்த 10 மாவட்டங்களுக்கும் இன்று ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், தேனி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி ஆகிய 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் சென்னையில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.