தமிழகத்தில் வார விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் பொதுமக்களின் வசதிக்காக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி சுப முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு சென்னை கோயம்பேடு, கிளாம்பாக்கத்தில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

இன்று  835 பேருந்துகளும், ஜூன் 8 ஆம் தேதி 570 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. அதேபோல் சென்னை திரும்ப வசதியாக ஜூன் 9ம் தேதி 705 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் தெரிவித்துள்ளார்.