
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக தமிழகத்தில் உள்ள நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன.
இந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு இன்று முதல் மூன்று நாட்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கோவை, நீலகிரி, நாமக்கல் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் இன்று முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் கோவை, தேனி, நீலகிரி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் நாளையும் நாளை மறுநாளும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.