
தமிழகத்தில் கடந்த 15ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் அதற்கு முன்பு இருந்தே மழை பெய்து வருகிறது. குறிப்பாக வங்கக்கடலில் வருகிற 22ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால் மழை தீவிரமடையும். ஏற்கனவே அரபிக் கடலில் நேற்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான நிலையில் அது இரு நாட்களில் வலுவடையும். நேற்று நள்ளிரவு சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. அதன் பிறகு புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் நேற்று காலை முதல் பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை பெய்தது. இந்நிலையில் இன்று மற்றும் நாளை வருகிற 24-ஆம் தேதி தமிழகத்தில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி இன்று வேலூர், திருப்பத்தூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் தர்மபுரி ஆகிய 6 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதேபோன்று நாளை கோயம்புத்தூர், திண்டுக்கல், நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதைத்தொடர்ந்து வருகின்ற 24-ஆம் தேதி நாகை, திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர், திருச்சி, பெரம்பலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு நகரின் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.