தமிழகத்தில் இன்று (டிசம்பர் 17ஆம் தேதி) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் இயங்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதாவது மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மாநகரமே வெள்ளத்தில் தத்தளித்து மக்கள் தங்களுடைய உடைமைகளை இழந்தார்கள்.

இந்நிலையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் ரூ.6 ஆயிரத்துக்கான நிவாரண டோக்கன்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், பொதுமக்கள் நலன் கருதி இந்த மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை அன்றும் ரேஷன் கடைகள் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.