ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்று, தேர்தலில் மொத்தம் 77 பேர் போட்டியிடுகின்றனர். இதையொட்டி, அங்கு அரசியல் கட்சிகளின் தேர்தல் பரப்புரை தீவிரமடைந்துள்ளது. 24, 25ம் தேதிகளில் காங். வேட்பாளரை ஆதரித்து CM ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.

இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்.25 காலை 10 மணி முதல் பிப்.27ம் தேதி இரவு 12 மணி வரை மதுபானக்கடைகள் மூடப்படும் என தேர்தல் அதிகாரி கிருஷ்ணணுண்ணி அறிவித்துள்ளார்.