தமிழக அரசு சார்பாக சிறப்பாக நடைபெற்று வரும் ஆவின் நிறுவனம் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனையை தொடர்ந்து குடிநீர் விற்பனையையும் தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் அனைத்து விற்பனை நிலையங்கள் மூலமாக குடிநீர் பாட்டில்கள் விற்பனை செய்ய ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி PET பாட்டில்கள் மூலம் ஆயிரம் மற்றும் 500 மில்லி வகைகளில் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் பாட்டில்கள் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ஆவின் வருமானம் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.