இன்ஃப்ளூயன்சா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் மாணவர்கள் பாதுகாப்பு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவலை தடுக்கும் வகையில் நாளை முதல் மார்ச் 26 ஆம் தேதி வரை ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் 1 முதல் 9ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான இறுதி தேர்வை முன்கூட்டியே நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் வேகமாக கொரோனா பரவல் பரவி வருவதால் கடந்த இரண்டு நாட்களாக தினசரி பாதிப்பு 40 கடந்துள்ளது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு உயிரிழப்பும் பதிவாகியுள்ளது. இதனால் பாதுகாப்பு நடைமுறைகளுக்காக கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றுமாறும் முக கவசம் அணியுமாறும் பொது மக்களுக்கு அரசு அறிவித்துள்ளது. மறுபுறம் எச்3 என் 2 வைரஸ் பாதிப்பும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.