கோவில்பட்டி அருகே கழுகுமலை வடக்கு அழகு நாச்சியாபுரத்தைச் சேர்ந்த 35க்கும் மேற்பட்ட பக்தர்கள், சாத்தூர் அருகிலுள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு வேனில் சென்றனர். சாமி தரிசனம் முடித்து ஊர் திரும்பிக் கொண்டிருந்தபோது, திடீரென வேனின் டயர் வெடித்ததால் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்தார். இதனால் வேன் கவிழ்ந்து பெரும் விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அங்கிருந்த பொதுமக்கள் அவர்களை மீட்டு உடனடியாக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விபத்து குறித்து சாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.