கோயம்புத்தூர் மாவட்டத்தில் வசித்து வரும் ஒரு 17 வயது மாணவியை கல்லூரி மாணவர்கள் 7 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த 17 வயது மாணவிக்கு சமூக வலைதளம் மூலமாக சில கல்லூரி மாணவர்களுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் நட்பாக மாறிய நிலையில் அவர்கள் குனியமுத்தூரில் உள்ள ஒரு அறைக்கு வருமாறு மாணவியை அழைக்க அதை நம்பி மாணவியும் அங்கு சென்றார். அப்போது 7 மாணவர்கள் சேர்ந்து அந்த மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

அந்த சிறுமி நீண்ட நேரமாக வீட்டிற்கு வராததால் பதறிப்போன சிறுமியின் பாட்டி உடனடியாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் படி உக்கடம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து சிறுமியை பத்திரமாக மீட்ட போலீசார் கல்லூரி மாணவர்கள் அனைவரையும் கைது செய்தனர். மேலும் தமிழகத்தில் ஏற்கனவே பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் என்பது அதிகரித்து வரும் நிலையில் தற்போது  மாணவியை கல்லூரி மாணவர்கள் சேர்ந்து பலாத்காரம் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.