
தென்மேற்கு வங்க கடல் பகுதியில் ஒரு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ள நிலையில் அது புயலாக மாறும் என்று கூறப்பட நிலையில் பின்னர் புயலாக மாறாது என்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே கரையை கடக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இது தற்போது சென்னைக்கு அருகே 430 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருவதால் இன்றும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அங்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இதேபோன்று தமிழகத்திலும் கடலூர், விழுப்புரம் ஆகிய பகுதிகளில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில், சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி செங்கல்பட்டு, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்காளர் ரெட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதேபோன்று தஞ்சாவூர், அரியலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.